ஞானசார தேரர் குற்றவாளி; ஹோமாகம நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

0
879
Bodu Bala Sena’s Gnanasara thero found guilty homagama Magistrate

(Bodu Bala Sena’s Gnanasara thero found guilty homagama Magistrate)
காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை குற்றவாளி என ஹோமாகம நீதவான் உதேஸ் ரணதுங்க இன்றைய தினம் தீர்ப்பளித்துள்ளார்.

குறித்த வழக்கு இன்று ஹோமாகம நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளார்.

இதற்கமைய இன்று ஞானசார தேரரின் கைவிரல் அடையாளம் பெற்றுக் கொள்ளவும், எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி அவரை அடையாளப்படுத்தல் மற்றும் தண்டனை வழங்குவதற்கும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் வழக்கு ஹோமாகம நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, அவரது மனைவியான சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதாக ஞானசாரருக்கு எதிராக ஹோமாகம பொலிஸாரால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Bodu Bala Sena’s Gnanasara thero found guilty homagama Magistrate