மதுரவாயலில் கத்தியால் தாக்கி செல்போன் திருடியவர்கள் கைது!

0
637
Cellphone stolen arrested knife Maduravayal

Cellphone stolen arrested knife Maduravaya

பீகாரை சேர்ந்தவர் அம்புஜகுமார் (24), இவர் மதுரவாயல் கார்த்திகேயன் நகரில் தங்கியிருந்து அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்,

இவர் வழக்கம்போல நேற்றைய முன்தினம் நள்ளிரவில் வேலை முடிந்து வீட்டிற்கு நடந்து சென்றிருந்த இவரை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் வழிமறித்துள்ளனர், பின்னர் அவர்கள் கையில் வைத்திருந்த கத்தியால் அம்புஜனை கை, கால் என பல இடங்களில் வெட்டிவிட்டு அவரது செல்போனை சென்றனர்,

Cellphone stolen arrested knife Maduravayal

இதேபோல மதுரவாயல் நகரைச் சேர்ந்தவர் சித்தார்த் (22) என்பவரையும் இதே கும்பல் அவரை கத்தியால் வெட்டி செல்போனை பறித்து சென்றுள்ளார்கள், மேலும் இது தொடர்பாக மதுரவாயல் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை கைது செய்துள்ளனர்,

மேலும் இந்த கும்பலை சேர்ந்த மூவரும் மதுரவாயல் ஆலப்பாக்கத்தை சேர்ந்த சேகர் (25), மணிவண்ணன் (26), சங்கர் (26) என தெரியவந்துள்ளது, இவர்கள் மூவரும் ஒரே நாளில் மூன்று பேரிடம் இதைபோல் கத்தியால் வெட்டி செல்போன்களை பார்த்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து கொள்ளையடித்த 3 செல்போன்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளார்கள்.

More Tamil News

Tamil News Group websites :