2 பேர் வெட்டிக்கொலை : ராமநாதபுரம் அருகே பதற்றம்!

0
596
2 people watchers tension near Ramanathapuram

2 people watchers tension near Ramanathapuram

வாலாந்தவரை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடந்த திருமணவிழாவில் பங்கேற்பதற்காக அதே பகுதியை சேர்ந்தவர்கள் வெளியூரில் இருந்து வந்துள்ளனர்,

இந்நிலையில் நேற்றிரவு மது போதையில் உள்ளூரில் இருந்தவர்களுக்கும் வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இரு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கிக்கொண்டுள்ளனர்,

இதில் அப்பகுதியை சேர்ந்த பூமிநாதன் மற்றும் விஜய் ஆகிய இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர், மேலும் சலீம் என்பவர் படுகாயத்துடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்,

இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், மேலும் சம்பவ இடத்தில் பதற்றமான சூழல் நிலவி இருப்பதால் அங்கு காவல்துறையினர் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :