கடலுக்கு செல்ல வேண்டாம் – கடற்றொழிலாளர்களுக்கான எச்சரிக்கை

0
414
warning navy fisher men increase air speed sea place

sea motion effect warning fisher men meteorology department
நாட்டின் மேற்கு, தெற்கு பிரதேசத்தில் நிலவும் முகில் காரணமாக புத்தளத்தில் இருந்து கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலான கரையோரத்திற்கு அப்பாலான கடல் பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் உடனடியாக அதிரிக்கக்கூடும் என்பதனால், கடல் பிரதேசத்தில் உடனடி கொந்தளிப்பு இடம்பெறுவதற்கான சாத்தியகூறுகளும் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும், மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான கடற்பிரதேசங்களில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல் நடவடிக்கையில் ஈடுபடுவோர் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென்று அந்த திணைக்களம் கேட்டுள்ளது.
sea motion effect warning fisher men meteorology department

More Tamil News

Tamil News Group websites :