யாழ். பல்கலைக்கழகத்தில் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வு

0
1034
Genocide commemoration event University Jaffna

(Genocide commemoration event University Jaffna)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல் நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

பல்கலைக்கழகத்தின் மத்தியில் உள்ள அலங்கார சுற்று வட்டத்தில் சுடரேற்றி நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன.

பல்கலைக்கழகத் துணைவேந்தர், பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் நினைவுச்சுடரை ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள், பணியாளர்கள் உட்பட பலர் சுடர்களை ஏந்தியவாறு, நினைவேந்தல் கீதம் இசைக்க அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து மலரஞ்சலி செலுத்தியதோடு, யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Genocide commemoration event University Jaffna