கால் டாக்சி ஓட்டுநர்கள் – காவல் ஆணையரகத்தில் புகார்!

0
684
Call Taxi Driver - Complaint Police Commissioner

Call Taxi Driver – Complaint Police Commissioner

உபர் கால் டாக்சி நிறுவனம் நிலுவைத்தொகை தராததால் சென்னை ஆலந்தூரில் ஓட்டுநர் ஒருவர் நேற்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,

அதன் தொடர்ச்சியாக கால் டாக்சி ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது, அதில் ஓலா மற்றும் உபர் கால் டாக்சி நிறுவனங்கள் கால் டாக்சி ஓட்டுநர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் விதமாக செயல்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது, குறிப்பாக செயலிகளைக் கொண்டு ஓட்டுநர்களிடம் மோசடி செய்வதாகவும், ஓட்டுநர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகையை கொடுப்பதில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

எனவே செயலி மூலம் பணமோசடி செய்யும் நிறுவனங்கள் மீது சைபர் க்ரைம் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

More Tamil News

Tamil News Group websites :