உலக பதினொருவர் அணியில் முதன்முறையாக நேபால வீரர்… : உத்தியோகபூர்வ அறிவிப்பு!!!

0
513
Sandeep Lamichhane added World XI team news Tamil

(Sandeep Lamichhane added World XI team news Tamil)

இங்கிலாந்தில் எதிர்வரும் 31ம் திகதி நடைபெறவுள்ள உலக பதினொருவர் மற்றும் மே.தீவுகள் அணிகளுக்கிடையிலான கண்காட்சி இருபதுக்கு-20 போட்டியில் நேபால வீரர் சந்தீப் லெமச்சேன் இணைக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் வரலாற்றில் நேபால வீரர் ஒருவர் உலக பதினொருவர் அணியில் இணைக்கப்படும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

நேபால தேசிய அணியில் விளையாடி வரும் 17 வயதான இளம் இடதுகை சுழற்பந்து வீச்சாளர் சந்தீப் லெமச்சேன். இறுதியாக நடந்துமுடிந்த உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகளில் 13 விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இவரது சிறந்த பந்து வீச்சை கவனத்தில் கொண்ட டெல்லி அணி, அவரை ஐ.பி.எல். ஏலத்தில் வாங்கியிருந்தது. ஐ.பி.எல். தொடரில் விளையாடிய முதல் நேபால வீரர் என்ற பெருமையையும் இவர் பெற்றிருந்தார்.

இந்நிலையில் உலக பதினொருவர் அணியில் இணைக்கப்பட்டிருந்த பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசன், சொந்த காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகியுள்ளதால் அவரின் இடத்துக்கு சந்தீப் லெமச்சேன் அழைக்கப்பட்டள்ளார்.

கடந்த வருடம் ஏற்பட்ட சூறாவளியினால் கரீபியன் தீவுகளில் பாதிக்கப்பட்ட ஐந்து மைதானங்களை புனரைமைப்பதற்கு நிதிசேர்க்கும் முகமாக குறித்த கண்காட்சி போட்டித் தொடர் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

<<Tamil News Group websites>>