காவலர் அருங்காட்சியகம் – முதன்முறையாக தமிழகத்தில் திறப்பு!

0
691
Guard Museum opening Tamil Nadu first time

Guard Museum opening Tamil Nadu first time

தமிழகத்தில் முதன்முறையாக கோவையில் அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்துள்ளார்,

கோவை ரயில் நிலையம் அருகே உள்ள 140 ஆண்டுகள் பழமையான ஹாமில்டன் கிளப் கட்டடத்தை சீரமைத்து தமிழ்நாடு காவலர் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது, இதில் பல்வேறு காலகட்டங்களில் ராணுவம் மற்றும் காவல் துறையினர் பயன்படுத்திய ஆயுதங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன,

கார்கில் போரில் இந்திய ராணுவம் பயன்படுத்திய ஆயுதங்கள், இந்திய கடற்படையில் உள்ள நீர்மூழ்கி கப்பல்களின் மாதிரிகள், விடுதலைப்புலிகள் பயன்படுத்திய ஆயுதங்கள், சந்தன கடத்தல் வீரப்பன் பயன்படுத்திய ஆயுதங்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன,

இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார், காவலர் அருங்காட்சியகத்தை பார்வையிடும் மாணவர்களின் திறன் மேம்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்,

மேலும் கோவை விமான நிலையத்தில் இரவில் தங்கி அதிகாலையில் புறப்படும் விமானங்களுக்கு எரிபொருள் சலுகை வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

More Tamil News

Tamil News Group websites :