4ம் எண் ராசியில்லை; துறவியாக்க முயற்சித்த தாய்; அம்மா வேண்டும் என கதறிய சிறுவன்

0
1162
Four year old boy Occurred Feisty

(Four year old boy Occurred Feisty)
ஜாதகத்தின்படி நான்காம் எண் ராசியில்லை எனக் கருதி தாயொருவர் பிலியந்தலை பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் நான்கு வயது சிறுவனை துறவியாக்குவதற்காக ஒப்படைக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு விகாரையில் ஒப்படைக்கப்பட்ட சிறுவன், இரவு முழுவதும் தனது தாயை தேடி அழுதுகொண்டிருந்த போது, பிலியந்தலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார்.

சிறு குழந்தையொன்றின் அழுகுரல் இரவு முழுவதும் பௌத்த விகாரையில் இருந்து கேட்டதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றது.

இந்த முறைப்பாட்டை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், குறித்த சிறுவனை மீட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொலிஸார் விகாரையின் விகாராதிபதியிடம் வினவியபோது, சிறுவனின் தாயும் இன்னொரு நபரும் குறித்த சிறுவனை துறவியாக்கும்படி தன்னிடம் ஒப்படைத்ததாகவும் கூறியுள்ளார்.

இன்றைய தினம் சிறுவனின் தாயுடன் தொடர்புகொள்ள முடியாமல் போன நிலையில், அன்றிரவும் தனக்கு அம்மா வேண்டும் என கூறி குறித்த சிறுவன் விடிய விடிய அழுது புலம்பியுள்ளான்.

சிறுவனை சமாதானப்படுத்த பொலிஸார் எடுத்த முயற்சிகள் வீணாகிய நிலையில், மறுநாள் இச்சிறுவனின் தாயை வரவழைத்தனர்.

23 வயதான சிறுவனின் தாய் சீதுவ பிரதேசத்திலுள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிவதாகவும், தனது மகனான இச்சிறுவனை நாள் பராமரிப்பு நிலையத்தில் விட்டு செல்வதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலும் துறவியாக்க பௌத்த பிக்கு சிறுவன் ஒருவனை தேடியதை அறிந்து தனது மகனை அந்த பிக்குவிடம் சென்று இவ்விகாரையில் ஒப்படைத்ததாகவும் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

விகாராதிபதியின் வாக்குமூலத்தையும் பெற்றுக்கொண்ட பொலிஸார், கெச்பேவை நீதிமன்றத்தில் சிறுவனை முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Four year old boy Occurred Feisty