நேற்றைய போட்டியால் வந்த வினை : ரஹானேவுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம்!

0
622
Rahane Fined Rs 12 Lakh IPL News Tamil

(Rahane Fined Rs 12 Lakh IPL News Tamil)

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைவர் அஜின்கே ரஹானேவுக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கெதிரான போட்டியில், சரியான நேரத்திற்குள் பந்து ஓவர்களை நிறைவுசெய்ய தவறியதால் குறித்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இம்முறை ஐ.பி.எல். விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுக்காக அபராதம் விதிக்கப்படும் இரண்டாவது அணித் தலைவராக அஜின்கே ரஹானே பெயரிடப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் சென்னை அணிக்கெதிரான போட்டியில் மெதுவாக பந்து ஓவர்களை வீசிய குற்றச்சாட்டுக்காக பெங்களூர் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 7 விக்கட்டுகள் வித்தியாசத்தில், மும்பை அணியை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

<<Tamil News Group websites>>