தமிழ் பெண்ணை தொந்தரவு செய்த புகையிரத ஊழியர் பிணையில் விடுதலை

0
802
Train employee released bail

(Train employee released bail)
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் குடும்பப் பெண்ணொருவருடன், தகாத முறையில் நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட புகையிரத ஊழியரை பிணையில் விடுத்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் சென்ற புகையிரதத்தில் பிரித்தானியா வாழ். தமிழ் குடும்ப பெண்ணொருவர் வவுனியா புகையிரத நிலையத்தில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்தார்.

இதன்போது குறித்த புகையிரதத்தில் பெருமளவில் சன நடமாட்டம் இல்லாமையால் இதனை பயன்படுத்திக் கொண்ட ரயில்வே சிட்டை பரீட்சிக்கும் ஊழியர் ஒருவர், அந்தப் பெண்ணுடன் தகாத முறையில் நடக்க முயற்சித்தார்.

இதனை அவதானித்த அங்கு நின்றவர்கள் அந்த ஊழியரிடம் சென்று ஏன் இவ்வாறு நடந்து கொள்கின்றீர்கள்? என கேட்ட போது, அவ்வாறு கேட்டவர்களை தாக்க முயற்சித்தார்.

மேலும் தமிழர்கள் கீழ்த்தரமானவர்கள் போன்று தகாத வார்த்தைகளை அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார்.

இதன்போது அங்கு சென்ற ஊடகவியாலாளர் ஒருவரையும் அவர் தாக்க முயற்சித்தார். இந்த சம்பவம் சாவகச்சேரி புகையிரத நிலையத்தை அண்மித்த போது நடந்து கொண்டிருந்தது.

‘நீங்கள் தமிழ் என்றால் என்னை ஒன்றும் செய்ய முடியாது, பொலிஸாராலும் யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது. இங்கு நான்தான் பெரியவன் என்று எச்சரிக்கும் தொனியில் அந்த ஊழியர் அனைவரையும் மிரட்டியுள்ளார்.

இந்த நிலையில் புகையிரத யாழ். பிரதான புகையிரத நிலையத்தை வந்ததடைந்ததும், அந்தச் சம்பவம் தொடர்பில் யாழ். ரயில் நிலைய அதிபருக்கு குறித்த பெண்ணால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதோடு, சம்பவத்துக்கான ஆதாரமாக காணொளியும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் ரயில்வே ஊழியரைக் கைதுசெய்த யாழ். பொலிஸ் நிலைய சிறுவர் பெண்கள் பாதுகாப்பு பிரிவு பொலிஸார் சம்பவம் தொடர்பில் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

சந்தேக நபர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் இன்று பிற்பகல் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சந்தேக நபரை பிணையில் விடுவிக்க பொலிஸார் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

அதனால் அவரை நிபந்தனையுடனான பிணையில் விடுவிக்க நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் உத்தரவிட்டார்.

இதேவேளை, இந்த அச்சுறுத்தல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டமை குறித்து மனிதவுரிமை ஆணைக்குழுவிலும் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

More Tamil News

Tamil News Group websites :

Tags; Train employee released bail