மிளாகாய் தூள் தூவி நூதன கொள்ளை…! வத்தளை வங்கியில் அரங்கேறிய சம்பவம்

0
798
Rs 7.5 lakhs ransacked from a private bank in Wattala

Rs 7.5 lakhs ransacked from a private bank in Wattala

வத்தளை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றியில் கொள்ளை சம்பவம் ஒன்று இன்று மதியம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவமானது பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த பொலிஸார் சுமார் 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கூறினர்.

வங்கியினுள் நுழைந்த சந்தேக நபர் பாதுகாப்பு அதிகாரி மற்றும் அங்கு பணியாற்றியவர்கள் மீது மிளகாய் தூளினை தூவிவிட்டு இந்த கொள்ளை சமபவத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் சந்தேக நபர் தொடர்பில் தெரிய வராத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வந்தனர்.

More Time Tamil News Today

Time Tamil News Group websites :