சசிகலாவிற்கு இன்று மீண்டும் கொரோனா பரிசோதனை

0
402

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், நான்காண்டு சிறை தண்டனை அனுபவித்த சசிகலா, கடந்த, 27ஆம் தேதி, விடுதலை செய்யப்பட்டார்.அதற்கு முன்பே, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சசிகலாவிற்கு தற்போது கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை. ஆனாலும், விதிமுறைப்படி, மூன்று நாட்கள் செயற்கை சுவாச கருவி உதவியின்றி சிகிச்சை பெற வேண்டும். தொற்று இல்லை என, மருத்துவ அறிக்கை வந்தால் மட்டுமே, மருத்துவமனையிலிருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை தெரிவித்திருந்தது. அதன்படி, இன்று, 10வது நாள் என்பதால், அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படஉள்ளது.

கொரோனா முடிவுகளில் நெகடிவ் என வந்தால், பெங்களூரில் இருந்து, பிப்ரவரி 5ஆம் தேதி, சசிகலா சென்னை திரும்புவார் என, தகவல் வெளியாகி உள்ளது. சசிகலாவை வரவேற்க அமமுக கட்சியினர் ஆர்வத்துடன் உள்ளனர்.