உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூத்த ஊடகவியலாளர் நடேசப்பிள்ளை வித்தியாதரன் போட்டியிடவுள்ளதாக தெரியவருகிறது. அவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் 1985ஆம் ஆண்டு முதல் இலங்கையில் உள்ள பத்திரிகை ஒன்றில் பணியாற்றியுள்ளார்.
குறித்த பத்திரிகையில் இருந்து வெளியேறிய பிறகு 2016 ஆம் ஆண்டு மற்றொரு பத்திரிகையை ஆரம்பித்து தற்போது பிரதம ஆசிரியராக செயற்படுகின்றார்.