சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் என்பவற்றுக்காக மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனைக் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி எதிர்வரும் 08 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலகுரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாவாகவும், கனரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணமானது சிறுநீர் பரிசோதனை தவிர்த்து 1500 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மருத்துவ பரிசோதனை கட்டணம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிப்பே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.