நாட்டில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி மிரிஹாணை பிரதேசத்திலும் , இம்மாதம் 9 ஆம் திகதி நாட்டின் வெவ்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற வன்முறைகளின் போது ஏதேனுமொரு வகையில் முப்படையினர் அசமந்த போக்குடன் செயற்பட்டனரா என்பது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு விசேட குவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அத்மிரால் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட , மார்ஷல் ஒப் த எயார் போர்ஸ் ரொஷான் குணதிலக மற்றும் ஜெனரல் தயா ரத்நாயக்க ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.