இலங்கை மக்களுக்கு உதவுவோம்! FAO உறுதிமொழி!

0
474

இலங்கையில் உணவுப் பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு, உணவுப் பொருட்களைப் பெறுவதற்கான உதவிகளை பெறுவதற்கு உதவியளிக்கவுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

இதற்கான உறுதிமொழியை FAO என்ற ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு வழங்கியுள்ளதாக ரணில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் இலங்கையின் குடிமக்களுக்கு உணவு விநியோகத்தை உறுதி செய்யமுடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.