அரச பணியாளர்கள் பணிக்கு வரவேண்டாம்! பிரதமர் பணிப்புரை

0
651

அரச பணியாளர்கள் நாளையதினம் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச பணியாளர்கள் பணிக்கு சமூகமளிக்க வேண்டாம் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை கூறினார்.