கனடாவில் தமிழ் இளைஞர் அதிரடியாக கைது!

0
631

கனடாவில் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப் படுத்திய தமிழ் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் சந்தேக நபரின் புகைப்படத்தையும் யோர்க் பிராந்திய பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Markham நகரை சேர்ந்த 25 வயதான ஜெனிசன் ஜெயக்குமார் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Markham massage நிலையத்தில் இலவச பாலியல் சேவைக்கான அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில், இவர் தன்னை ஒரு பொலிஸ் அதிகாரி என அடையாளப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் கடந்த 8ம் திகதி நிகழ்ந்ததாக கூறப்படும் நிலையில்,  கைது செய்யப்பட்டவர் காவல்துறையில் பணியாற்றவில்லை என்பதை யோர்க் பிராந்திய பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இனிவரும் காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக பொலிஸார் கைது செய்யப்பட்ட நபரின் புகைப்படத்தை வெளியிட்டனர்.