உயிருடன் இருக்கும்போதே மரணச் சான்றிதழ் பெற்ற நபர்!

0
560

எம்பிலிப்பிட்டிய – செவனகல – நெலும்வெவ பிரதேசத்தில் உயிருடன் இருக்கும்போது மரணச் சான்றிதழ் பெற்ற நபர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு வாகன விபத்தில் ஏற்பட்ட மரணம் தொடர்பில் இந்த நபருக்கு மரணச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

மகிழுந்து விபத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டபிள்யூ.இ. சரத் ​​என்ற 48 வயதான இந்த நபர் தான் எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து எமது செய்தி பிரிவிற்கு விளக்கமளித்தார்.