ஈழ பிரச்சனையில், திமுக – காங்கிரசை கண்டித்து, அதிமுக சார்பில் நடைபெற்ற சேலத்தில் நடந்த கண்டன பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு திமுக – காங்கிரசே காரணம் என குற்றம்சாட்டினார்.keeping magnifying glass aiadmk regime corruption edappadi palinasamy
இலங்கை தமிழர்களுக்கு ஏற்பட்ட துயரங்களுக்கு கருணாநிதியும், ஸ்டாலினுமே காரணம் என குறை கூறிய எடப்பாடி பழனிசாமி, திமுக – காங்கிரசை போர்குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
திமுக ஒரு கட்சி அல்ல; ஒரு கம்பெனி என குற்றம்சாட்டிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் குடும்பத்தினரை தவிர வேறு யாரும் பதவிக்கு வர முடியாது என தெரிவித்தார்.
தந்தையின் போர்வையில் ஸ்டாலின் பதவிக்கு வந்ததாக கூறிய எடப்பாடி பழனிச்சாமி, அதிமுகவில் கடைக்கோடி தொண்டனும் பதவிக்கு வர முடியும் என்றும் தெரிவித்தார்.
வேண்டுமென்றே திட்டமிட்டு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்த முயல்வதாக குற்றம்சாட்டிய முதலமைச்சர், திமுக ஆட்சியில் தான் புதிய தலைமைச்செயலக டெண்டரில் முறைகேடு நடந்ததாக புகார் தெரிவித்தார்.
பூதக்கண்ணாடியை வைத்துப் பார்த்தாலும் அதிமுக ஆட்சியில் ஊழலை கண்டுபிடிக்க முடியாது எனவும் முதலமைச்சர் சவால் விடுத்தார்.
ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றது ஒரு விபத்து என கூறிய முதல்வர், திமுகவினரின் திட்டத்தின்படி, அதிமுகவை உடைக்க தினகரன் முயல்வதாக குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதாவுக்கு துரோகம் இழைத்தவர்களை அவரது ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
இந்தியா தமிழ் நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை :
- 2 வகுப்பு வரை வீட்டுப்பாடம் வழங்கக்கூடாது? – விளக்கம் கேட்கும் உயர் நீதிமன்றம்!
- எம்.எல்.ஏ பதவியிலிருந்து கருணாஸை தகுதிநீக்கம் செய்யுங்கள்! – சபாநாயகரிடம் மனு!
- தமிழத்தில் 3 நாட்களுக்கு மழை! – இன்றைய வானிலை முன்னறிவிப்பு!
- போலி ஆவணங்கள் மூலம் தொழிலதிபர்களை ஏமாற்றிய தம்பதி கைது!
- சிலை கடத்தல் வழக்கை விசாரிக்க முடியாது… கை விரித்தது சிபிஐ… – தமிழக அரசு அதிர்ச்சி!
- மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையுள்ள அமைப்பு இடதுசாரி அமைப்பு தான்! – லெனின்பாரதி பேச்சு!
- ரஃபேல் விவகாரத்தில் இன்னும் 3 மாதங்களுக்குள் பூகம்பம் வெடிக்கும்! – ராகுல்காந்தி!
- தூத்துக்குடி மாணவி சோபியா மனித உரிமை ஆணையத்தில் ஆஜர்…!
- கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு! – நீதிமன்றத்தில் போலீசார் மனு!
- முத்தத்திற்கு ஆசைப்பட்டு நாக்கை பறிகொடுத்த கணவர்..!