தனது மனைவியை தாக்கி ஹீட்டரை வெப்பமேற்றி அவரது உடலில் தீக்காயங்களை ஏற்படுத்திய நபர் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். Husband Attacks Wife Anuradhapura
தலாவ மீகஸ்சேகம பிரதேசத்தை சேர்ந்த சந்தேக நபரை நேற்றைய தினம் தம்புத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் திகதி இரவு தனது தாய் வேறு ஒரு நபருடன் வீட்டின் அறையில் இருப்பதாக மூத்த மகன் தந்தைக்கு தொலைபேசி ஊடாக அழைத்து தெரிவித்துள்ளார்.
தொலைபேசி அழைப்புக்கு அமைய மொரட்டுவை பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்த தான் அன்றைய தினம் இரவு தலாவயில் அமைந்துள்ள வீட்டுக்கு வந்தாகவும், இதன்போது மனைவி வீட்டில் இல்லை எனவும் சந்தேக நபர் காவல்துறைக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
பின்னர் மேற்கொண்ட தேடுதலில் அவர் உறவினர் ஒருவரின் வீட்டில் தலைமறைவாக இருந்த நிலையில், கண்டுபிடித்ததாக சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
மனைவியின் செயலால் கோபமடைந்து அவரது கை கால்களை கட்டி தாக்கியதுடன், ஹீட்டரை வெப்பமேற்றி உடலில் பல இடங்களில் சூடு வைத்ததோடு, அவரது தலை முடியையும் வெட்டியதாக சந்தேக நபர் காவல்துறையினரிடம் மேலும் குறிப்பிட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில், தாக்குதலுக்கு உள்ளான மனைவி தற்போது அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார்.