சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக் கினன் , வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, கைதடியில் உள்ள முதலமைச்சரின் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். North Chief Minister Vigneswaran No Idea New Political Party
இந்த சந்திப்பின், பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் தனது அரசியல் எதிர்காலம் தொடர்பில் கருத்து கூறினார். அவர் கூறியுள்ளதாவது,
“எனது அரசியல் எதிர்காலத்தைப் பற்றியும், புதிய கட்சி உருவாக்கப் போகின்றீர்கள் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும் கனேடியத் தூதுவர் என்னிடம் வினவினார்.
அதற்கு நான், இதுபற்றி ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது, எனது கட்சி என்னை வேட்பாளராக நிற்க வாய்ப்பளிக்காவிடின், வீட்டிற்குச் செல்வேன் அல்லது இன்னொரு கட்சியுடன் இணையலாம், இல்லாவிடின், புதிதாக ஒரு கட்சியை ஆரம்பிக்கலாம் என்று தான் கூறியிருந்தேன்.
ஆனால், ஊடகங்கள் நான் கூறிய முதல் இரு விடயங்களையும் விட்டுவிட்டு, மூன்றாவதாக கூறிய விடயத்தை மட்டும் பெரிதாக வெளியிட்டு விட்டன.
தனிக்கட்சியை ஆரம்பிப்பது தொடர்பாக எந்த நடவடிக்கையையும் நான் எடுக்கவில்லை என்று அவருக்கு தெரிவித்துள்ளேன்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் நிறுவனத்திற்கு 2893 கோடி ரூபா நஷ்டம்
- நோர்வூட்டில் சடலமாக மீட்கப்பட்ட பெண் அடையாளம் காணப்பட்டார்
- கட்டாரில் உள்ள இலங்கையர்களுக்கு நற்செய்தி
- யாழில். சிறுவன் செய்த செயல்; பொலிஸார் விசாரணை
- பதவிக் கதிரைகளுக்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல; டெனீஸ்வரன் அதிரடி முடிவு
- கள்ளக் காதலனுடன் மனைவி உல்லாசம்; கணவன் வெட்டிக் கொலை (முழு விபரம்)
- 11 வயது சிறுமியை வர்த்தகர் துஷ்பிரயோகம்; கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டம்
- யாழ்ப்பாணத்தில் நாமல் ராஜபக்ச
- சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் விற்பனை
- விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தேங்காய் உடைத்து எதிர்ப்பு போராட்டம்