இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான வேலனை வேணியன் இன்று மாரடைப்பு காரணமாக காலமானர். Senior Tamil Politician Velani Veniyan Died 80 Age
80 வயதான வேலணை வேணியன் மூன்று தடவைகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.
இவர் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக இருந்துள்ளார்.அத்துடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகவும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணை உப தலைவராகவும் வேலனை வேணியன் பதவி வகித்தார்.
இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியியிலிருந்து அண்மையில் விலகிய வேலனை வேணியன் நவோதயா மக்கள் முன்னணியுடன் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவரின் மறைவுக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் , சனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபா கணேசன் மற்றும் பல அரசியல்வாதிகள் தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இரட்டைப் பிரஜாவுரிமை வழங்க முடியாது
- சாதாரண முறைப்பாடாயினும் புறக்கணிக்க முடியாது
- நான் உங்களோடு இல்லை – ஆனால் பிறந்த நாளை கொண்டாட மறக்க வேண்டாம்
- பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்
- இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்
- உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்கள்
- விஜயகலாவை நினைத்தால் கவலையாக இருக்கின்றது : கோத்தபாய
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்