ஈரானில் நடைபெறவுள்ள ஆசிய செஸ் சம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க மாட்டேன் என இந்திய செஸ் வீராங்கனை சௌமியா சுவாமிநாதன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
ஆசிய சம்பியன்ஷிப் செஸ் போட்டித் தொடர் எதிர்வரும் 26ம் திகதிமுதல் ஆகஸ்ட் 4ம் திகதிவரை ஈரானில் நடைபெறவுள்ளது.
ஈரனில் போட்டிகளில் கலந்துக்கொள்ளும் வீராங்கனைகள் முஸ்லிம் முறைப்படி ஹிஜாப் அணிந்து போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என ஈரான் தெரிவித்துள்ளது.
எனினும் இதற்கு முழுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ள சௌமியா சுவாமிநாதன், ஹிஜாப் அணிந்துதான் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமானால், நான் ஆசிய செஸ் சம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொள்ள போவதில்லை என தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
உலக ஜுனியர் பெண்கள் பட்டம் மற்றும் மகளிருக்கான கிராண்ட் மாஸ்டர் பட்டம் உட்ப பல்வேறு பட்டங்களை வென்றுள்ள இவர், இந்திய செஸ் தரப்படுத்தலில் 5வது இடத்தை பிடித்துள்ளார்.
1979ம் ஆண்டு இடம்பெற்ற இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் ஈரானின் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது. இதன் பின்னர் போட்டிகளில் பங்கேற்கும் பெண்களும் ஹிஜாப் அணிந்தவாறே போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
சௌமியா சுவாமிநாதன் மேலும் குறிப்பிடுகையில்,
“போட்டி ஏற்பாட்டுக்குழுவினர் தேசிய உடையையும், விளையாட்டு உடையையும் அணிய வேண்டும் என விரும்புவதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எனினும மதக்குறியீடு கொண்ட உடையினை நிர்ப்பந்தமாக அணிய சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
வீராங்கனைகளின் விருப்பப்படுவார்களாயின், குறித்த உடைகளை அணியச் சொல்லலாம். ஆனால் விருப்பமில்லாத ஒருவரை அணியச் சொல்வதை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஈரானில் உள்ள சட்ட நிபந்தனைகள் எனது தனிப்பட்ட சுதந்திரம், பேச்சு சுதந்திரம், அடிப்படைச் சுதந்திரம் மற்றும் மதச் சுதந்திரத்திற்கு எதிராக உள்ளது. இப்படி இருக்கும் போது எனது தனிப்பட்ட உரிமையை பாதுகாப்பதற்கு போட்டிகளில் கலந்துக்கொள்ளாமல் இருப்பதுதான் சிறந்த வழி.
விளையாட்டுக்காக பல்வேறு விடயங்களை விட்டுக்கொடுத்திருக்கிறேன். ஆனால் இதுபோன்ற விடயங்களில் ஒருபோதும் சமரசம் செய்துக்கொள்ள முடியாது” என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- மே.தீவுகளிடம் சரணடையுமா இலங்கை? : தொடர்கிறது போராட்டம்!!!
- மே.தீவுகளுக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை படுதோல்வி!!!
- 11வது முறையாக பிரென்ச் ஓபன் கிண்ணத்தை வென்றார் நடால்!!!
- மே.தீவுகளுக்கெதிரான அடுத்த போட்டியில் களமிறங்கும் முன்னணி வீரர்!!!
- சென்னை அணியில் அதிரடியை வெளிப்படுத்தியற்கான காரணம் என்ன? : கூறுகிறார் டோனி
- திரில் வெற்றியுடன் சம்பியன்ஸ் லீக் இறுதிப்போட்டியில் லிவர்பூல்!
- சென்னையில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுக்குமா கொல்கத்தா!
- கொல்கத்தாவை மிரள வைத்த ரஷீட் கான்!!! : சென்னையுடன் இறுதிப்போட்டியில் ஹைதராபாத்!!!
<<Tamil News Group websites>>
soumya swaminathan latest news Tamil, soumya swaminathan latest news Tamil