மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

0
43

தெல்தெனிய, கரல்லியத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சீமெந்து தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் கம்பிகளை அறுத்துக் கொண்டிருந்த நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு மின்சாரம் தாக்கிய நபர் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 62 வயதுடைய கட்டுகித்துல, உடிஸ்பத்துவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.