கினி நாட்டை சேர்ந்த  இரண்டு பெண்கள் கட்டுநாயக்கவில் கைது! 

0
45

2 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களுடன் இரு வெளிநாட்டுப் பெண்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். 

கினியா நாட்டைச் சேர்ந்த இரண்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் துருக்கி இஸ்தான்புல் நகரத்திலிருந்து டர்கிஷ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று (20) காலை 6 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவர்களிடமிருந்து 500 கிராம் நிறையுடைய 40 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் 2 கோடி ரூபா பெறுமதியானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.