வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகிறாரா தீபிகா?: வெளியான புகைப்படத்தால் சர்ச்சை

0
36

தீபிகா – ரன்வீர் திருமணம் 2018ஆம் ஆண்டு நடந்து முடிந்தது. அவர்களின் திருமணம் நடந்து 5 வருடங்கள் நிறைவடைந்த நிலையில் வழமையாக அனைவரும் கேட்பதைப் போல் குழந்தை எப்போது? என்ற கேள்வியை அனைவரும் அவர்களிடம் கேட்டு வந்தனர்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் வருகின்ற செப்டெம்பர் மாதம் குழந்தையை எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்கள்.

அம்பானி வீட்டுத் திருமணத்தில்கூட வயிற்றை மறைக்கும்படியான உடையே அணிந்திருந்தார் தீபிகா. இந்நிலையில் ‘சிங்கம் எகெய்ன்’ என்ற திரைப்படத்தில் லேடி சிங்கம் சக்தி ஷெட்டியாக நடிக்கிறார் தீபிகா.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து திபிகாவின் புகைப்படம் வெளியாகியிருந்தது. அதில் தீபிகாவின் வயிற்றைப் பார்த்த இரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனைப் பார்த்த சிலர் ‘தீபிகா வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெறுகிறார். இந்த உண்மையை மறைக்கிறார்’ எனவும் சர்ச்சையை கிளப்பி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்று இன்னும் தெரியவரவில்லை.