இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட இளம் தம்பதியினரின் சடலங்கள்..

0
250

இளம் தம்பதியினர் வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

இந்தச் சம்பவம் குருநாகல், நாரம்மலை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் வசித்த வீட்டின் அறையொன்றிலிருந்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலங்களாக மீட்கப்பட்ட தம்பதியினர்

அத்தோடு 29 வயதுடைய வசந்த, 27 வயதுடைய ரோஹிணி ஆகியோரின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குருநாகல், மல்லவபிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி நாரம்மலை பிரதேசத்திலுள்ள வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளனர்.

அந்த வீட்டிலிருந்து நேற்றுப் பிற்பகல் அவர்கள் கழுத்திலும் உடலிலும் பாரிய வெட்டுக்காயங்களுடன் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டின் அறை இரத்த வெள்ளத்தில் காணப்பட்டது.

இரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட இளம் தம்பதியினரின் சடலங்கள்; கொலையாளிகளைத் தேடும் பொலிஸார் | Bodies Of A Young Couple Recovered Of Blood

பொலிஸார் விசாரணை

இருவரும் வன்முறைக் குழுவொன்றால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

நீதிவானின் உத்தரவுக்கமைய சடலங்களை உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த பொலிஸார், கொலையாளிகளைத் தேடும் நடவடிக்கையில் களமிறங்கியுள்ளனர்.