கொழும்பு வீதிகளில் இலங்கை LGBTIQA+ சமூகத்தினர் (05) அணிவகுத்துச் சென்றதுடன் ‘சுதந்திர அபிமான அணிவகுப்பு’ எனும் கருப்பொருளில் அணி திரண்டிருந்தனர்.
பல்வேறு வண்ணமயமான ஆடைகளை அணிந்த குழுவினர் தாமரைத் தடாகம் சுற்றுவட்டத்தில் இருந்து அணிவகுப்பில் பங்கேற்று கிரீன் பாத் வழியாக கொள்ளுப்பிட்டி வரை சென்றனர். அணிவகுப்பில் பங்குபற்றியவர்கள் பல்வேறு வாசகங்கள் தாங்கிய பதாகைகளைக் ஏந்தியவாறு சென்றனர்.
ஸ்டாண்ட்-அப் நகைச்சுவையில் கருத்து தெரிவித்ததற்காக சமீபத்தில் கைதுசெய்யப்பட்ட நடாஷா எதிரிசூரியவை விடுவிக்குமாறு அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் வாசகம் உட்பட பல்வேறு வாசகங்களையும் அவர்கள் ஏந்தியிருந்தனர்.