யாழில் சற்றுமுன்னர் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சுட முயன்றவர்களால் பரப்ரப்பு ஏற்பட்டுள்ளது
வடமராட்சி கிழக்குப்பகுதியில் மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த வேளை திடிரென மோட்டார் சைக்கிளில் உட்புகுந்த இருவர் பிஸ்டலை எடுத்து கஜேந்திரகுமார் சுட முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து உடனடியாக அவர்கள் இருவரையும் அங்கிருந்த மக்கள் மடக்கிப்பிடிக்க முற்பட்ட போது பிஸ்டலுடன் வந்த நபர் தப்பியோடிவிட அவருடன் வந்தவர் பிடிக்கப்பட்டுள்ளார். பிடிபட்டவரிடம் விசாரித்த போது அவர் சி.ஐ.டி என தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.