பொசனை முன்னிட்டு களுகங்கையில் வியக்கவைத்த தோரணம்

0
166

பொசன் தினத்தை முன்னிட்டு இலங்கையில் முதல் தடைவையாக கங்கையில் தோரணம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

இரத்தினபுரி மூவகம் களுகங்கையின் இடையே முதலாவது தடவையாக இவ்வாறு பாரிய தோரணம் ஒன்று அமைக்கப்பட்டு வருகின்றது.

இரத்தினபுரி மூவகம் சிறி விசுந்தாராம அறநெறி பாடசாலை மற்றும் இரத்தினபுரி இளைஞர் அமைப்பு என்பன இணைந்து இந்த தோரணம் அமைக்கப்பட்டுள்ளது.

5 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்ட மிகவும் பாரிய தோரணமாக அமைக்கபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.