நாளைய தினம் இடம்பெறவுள்ள ஜனாதிபதியின் விசேட உரை

0
174

நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி நாளை விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க கடந்த ஒன்பது மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் அவர் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி இலங்கை அரசின் சமூக பொருளாதார அரசியல் சீர்திருத்த வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பிலும் ஜனாதிபதி அறிக்கையொன்றை வெளியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விசேட அறிக்கையொன்றை விடுத்து நாட்டின் இலக்குகளை அடைவதற்கான செயற்பாட்டுப் பிரேரணையையும் ஜனாதிபதி முன்வைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.