காதலி வீட்டில் காதலன் மீது சரமாரி தாக்குதல்

0
172

கட்டுகஸ்தோட்டையில் இளைஞர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக தெரிவித்த மூவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அப் பகுதியில் இளைஞர் ஒருவரும் யுவதி ஒருவரும் உரையாடி கொண்டிருந்த நிலையில் இருவரையும் அவ் யுவதியின் வீட்டிற்கு அழைத்து சென்று அந்த இளைஞர் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

அத்தோடு 17 வயதுடைய அவ் யுவதியும் 18 வயதுடைய இளைஞரும் காதலர்கள் என விசாரணையின் ஊடக தெரியவந்துள்ளது. 

அத்தோடு தாக்குதலுக்கு உள்ளான இளைஞரை அவரின் வீட்டில் யுவதியின் உறவினர்கள் ஒப்படைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

காதலி வீட்டில் வைத்து காதலன் மீது சரமாரி தாக்குதல் | Barrage Attack On Boyfriend At Girlfriends House

இந்நிலையில் இளைஞரை வைத்தியசாலையில் அனுமதித்ததோடு அவரின் உறவினர்கள் கட்டுகஸ்தோட்டை பொலிஸ் நிலையில் முறைப்பாடு செய்துள்ளனர்.

அவ் குறைபாட்டிற்கு அமைய யுவதியின் தாய், தந்தை, மற்றும் உறவினர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.