நடாஷா நகைச்சுவைக்கு சிரித்தவர்களுக்கு வலை!

0
216

பெளத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் நடாஷா எதிரிசூரிய கூறிய நகைச்சுவைக்கு சிரித்தவர்களை அடையாளம் காண பொலிஸ் ஆய்வு ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தென்னிலங்கை பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 

CID ஆல் கைது

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டமை தொடர்பில் நடாஷா எதிரிசூரிய குற்றத்தடுப்பு பிரிவினரால்(CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் சிங்கப்பூர் செல்வதற்காக நேற்றையதினம் (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

32 வயதான நடாஷா எதிரிசூரிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்துகளை வௌியிட்டமை தொடர்பில் சர்ச்சையினை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.