சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழர்

0
309

சிங்கப்பூரில் போதைப்பொருள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த தமிழருக்கு மரண தண்டனைய நிறைவேற்றியுள்ளது.

தங்கராஜூ சுப்பையா என்ற தமிழரே இவ்வாறு தூக்கிலிடப்பட்டுள்ளார் தங்கராஜூ சுப்பையா இன்று அதிகாலை அவர் சாங்கி சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டதாக அவரது குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் தூக்கிலிடப்பட்ட தமிழர் | Tamil Who Was Hanged In Singapore

இந்நிலையில் தங்கராஜா மீது பலவீனமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது சட்டசெயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறவில்லை என மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதேசமயம் இவர் கஞ்சாவை கடத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக சிங்கப்பூர் அதிகாரிகள் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.