இனி இத்தாலியில் செல்ஃபி எடுத்தால் அபராதம்!

0
246

இத்தாலியில் எதிர்வரும் காலத்தில் செல்ஃபி எடுத்தால் அபராதம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தீர்மானத்தை இத்தாலியின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலம் ஒன்றின் நகர அதிகாரிகள் எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி செல்பி எடுக்கும் சுற்றுலா பயணிகளுக்கு 275 யூரோ அபராதம் விதிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த முடிவு தொடர்பில் சர்வதேச அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

செல்ஃபி எடுத்தால் அபராதம்: இந்த நாட்டில் தெரியுமா? பரபரப்பு செய்தி | Italy To Impose Fines For Taking Selfies In Future

மேலும், இந்த முடிவை எடுத்ததற்கு போக்குவரத்தினை அதிகாரிகள் காரணமாக கூறியுள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் செல்பி எடுக்க முயல்வதால் பகலில் தேவையற்ற போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.