மனைவி, பிள்ளைகளை விட்டு தனியே செல்லும் இளவரசர் ஹாரி!

0
347

பிரிட்டன் மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழா அடுத்தமாதம் 6 ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் மனைவி, பிள்ளைகளைவிட்டு இளவரசர் ஹாரி மட்டும் முடிசூட்டு விழா நிகழ்வில் பங்கேற்பார் என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

முடிசூட்டு விழாவில் இளவரசர் ஹாரி கலந்து கொள்வார் என்றும் அவரது மனைவி மேகன் பிள்ளைகளுடன் அமெரிக்காவில் தங்கியிருப்பார் என்றும் பக்கிங்ஹம் அரண்மனை அறிவித்தது.

பலரிடம் தலைதூக்கியிருக்கும் கேள்வி

மனைவி, பிள்ளைகளைவிட்டு தனியே செல்லும் இளவரசர் ஹாரி! | Prince Harry Leaves His Wife And Children Alone

வரலாற்றுச் சிறப்புடைய மன்னர் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவில் இருவரும் கலந்து கொள்வார்களா என்ற கேள்வி பலரிடம் தலைதூக்கியிருக்கும் வேளையில் பக்கிங்ஹம் அரண்மனை அந்த அறிவிப்பை வெளியிட்டது.

முடிசூட்டு விழாவுக்கான அழைப்பைப் பக்கிங்ஹம் அரண்மனை இளவரசர் ஹாரிக்கும் அவரது மனைவி மேகனுக்கும் சென்ற மாதம் அனுப்பி இருந்தது. இருப்பினும் அவர்கள் விழாவில் கலந்து கொள்வார்களா என்று அந்நேரத்தில் உறுதி செய்யப்படவில்லை.

மன்னரின் முடிசூட்டு விழா நாடு முழுவதும் மூன்று நாள்களுக்கு இடம்பெறும். அதில் பொதுமக்களும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மனைவி, பிள்ளைகளைவிட்டு தனியே செல்லும் இளவரசர் ஹாரி! | Prince Harry Leaves His Wife And Children Alone