இலங்கையில் திடுக்கிடும் சம்பவம்: கொடூரமாக குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை!

0
234

மொனராகலை – பதல்கும்புர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் கழுத்து அறுக்கப்பட்டு குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் (28-03-2023) இரவு இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் 41 வயதான தர்மபால விஜயசிறி என்பவரும் 38 வயதான ரோஹித குணரட்ன என்பவருமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸார் விசாரணை

காணித் தகராறில் இரண்டு தரப்பினருக்கிடையில் இடம்பெற்ற மோதல் இறுதியில் கொலையில் முடிவடைந்துள்ளது என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் திடுக்கிடும் சம்பவம்: கொடூரமான முறையில் குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை! | Two Family Members Were Massacred In Monaragala