துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் கொல்லப்பட்ட அதிகாரி!

0
224

 கலன்பிந்துனுவ பிரதேசத்துக்குள் புகுந்த யானைக் கூட்டத்தை விரட்டச் சென்ற ரித்திகல வனஜீவராசிகள் அலுவலகத்தின் வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரி யானை தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.

சம்பவத்தில் மாத்தளை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான பி.எம்.விஜய்கோன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

யானைக் கூட்டத்தை விரட்ட துப்பாக்கிச் சூடு

சுமார் இருபது பேர் கொண்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவொன்று காட்டு யானைக் கூட்டத்தை விரட்ட துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதால் கொல்லப்பட்ட அதிகாரி! | The Officer Was Killed Due To The Use Of Firearms

இதன் காரணமாக ஆத்திரமடைந்த யானையொன்று வனவிலங்கு அதிகாரிகளைத் துரத்திச் சென்ற நிலையில் அவர்களில் ஒருவரைக் கொன்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.