மாணவனின் உயிரைப்பறித்த கைப்பேசி..

0
229

ரயிலில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் நேற்று பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மாணவர் மோதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியில் உள்ள அரச பாடசாலை ஒன்றில் கல்வி கற்று வந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விசாரணையில் தெரிய வந்தது

விசாரணையில் மாணவன் தனது கைப்பேசியில் பேசிக் கொண்டு பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தில் பயணிக்காமல் ரயில் தண்டவாளம் ஊடாக பயணிக்கும் போது ரயிலில் மோதுண்டு உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.