கொழும்பில் இரவு பயங்கர சம்பவம்; துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர்!

0
236

கொழும்பு பகுதியொன்றில் வாகன கராஜ் ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்தனர்.  

இந்த சம்பவம் நேற்றிரவு (25-03-2023) ஹோமாகம – மாபுல்கொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைக் கொண்டு இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பில் இரவு பயங்கர சம்பவம்: துப்பாக்கிச்சூடு நடத்திய இருவர்! | Homagama Colombo Two People Opened Shooting

துப்பாக்கிச்சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, இரண்டு வாகனங்களும் சேதமடைந்தன.

துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.