ஒரே வீட்டில் 3 பெண்களுடன் ஆபாசமாக அரட்டை அடித்த பாதிரியார்; வெளியான அதிர்ச்சி தகவல்!

0
300

இளம் பெண்களிடம் ஆபாச சாட்டிங்கில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பாதிரியாரை கைது செய்த சைபர் கிரைம் பொலிஸார் நடத்திய விசாரணையில் பல தகவல்கள் தெரியவந்தன. காதலித்த பெண்ணை கரம்பிடிக்க பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் பாதிரியார் பணியை விட்டுவிட்டு இல்லற வாழ்க்கையில் ஈடுபட ஆசைப்பட்டதாகவும் பாதிரியார் பெனடிக் தெரிவித்து இருந்தார்.

அதே சமயம் பாதிரியாரின் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பாதிரியார் பல பெண்களுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்த போட்டோக்கள் லேப்டாப்பில் இருந்துள்ளன. பாதிரியாரின் லேப்டாப்பில் இருக்கும் பெண்கள் குறித்தும் அவர் வாட்ஸ் அப் சாட்டிங்கில் தொடர்புடைய பெண்கள் குறித்தும் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரே வீட்டில் 3 பெண்களிடம் ஆபாச சாட்டிங் செய்த பாதிரியார்; வெளியான அதிர்ச்சித் தகவல்! | Priest Who Chatted Obscenely 3 Women Same House

பாதிரியாரின் லேப்டாப்பில் இருக்கும் பெண்களில் கல்லூரி மாணவிகள் முதல் திருமணம் ஆன பெண்கள் வரை இடம்பெற்றுள்ளனராம். அதில் ஒரே வீட்டில் வசிக்கும் தாய், மகள், மருமகள் என மூவரிடமும் தனித்தனியாக சாட்டிங்கில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதன்போது தொழில் அதிபர் ஒருவரது வீட்டைச் சேர்ந்த அந்த மூன்று பெண்களுக்கும் மாறி மாறி தெரியாத அளவுக்கு ரகசியமாக பாதிரியார் சாட்டிங் செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாது ஒரு வீட்டில் உள்ள அக்காள், தங்கை ஆகியோருக்கும் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பி வளைத்திருப்பதும் தெரியவந்துள்ளதாம்.

இந்த நிலையில் பாதிரியாரை காவலில் எடுத்து விசாரிக்க பொலிஸார் முடிவு செய்துள்ளனராம். பாதிரியாரின் ஆபாச படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் பெண்களின் ஆபாச படங்களை வெளியிடுவது சட்டப்படி குற்றம் என்று கன்னியாகுமரி எஸ்.பி ஹரிகிரன் பிரசாத் தெரிவித்து இருக்கிறார்.