மத மாற்றத்திற்கு எதிராக அறவழிப் போராட்டம்!

0
251

காலை 9.30 மணியளவில் மானிப்பாயில் இந்துக்களின் அறவழிப் போராட்டம் இடம்பெறும் என மறவன்புலவு சச்சிதானந்தம் தெரிவித்தார்.

இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில் மதமாற்றி பால் தினகரன் அந்நிய நாட்டவர் அந்நியப் பணத்துடன் அந்நியக் கொள்கைகளைப் புகுத்த சுற்றுலா வணிக நுழைவு உரிமத்தில் வந்துள்ளார்.

மானிப்பாயில் யாழ். நகரில் மதமாற்ற முயற்சிக் கூட்டங்களில் பங்கு கொள்கிறார். அதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் அந்நியர் பலர் அப்பட்டமான சட்ட மீறல்களில் ஈடுபடுகின்றனர்.

நாங்கள் இச்சட்ட மீறல்களை அரசின் குடி வரவுத்துறை மற்றும் காவல்துறையினரின் பார்வைக்கு எடுத்துச் செல்லுகிறோம்.

அந்தவகையில் இந்த கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறும். இந்து உணவாளர்கள் அனைவரும் இதில் கலந்து கொள்க. மத மாற்றிகளை விரட்டுவோம் மத வாதிகளை அகற்றுவோம் மத வெறியர்களை வெளியேற்றுவோம்’ என அவர் தெரிவித்திருந்தார்.