வீதியில் சென்ற 19 வயது யுவதிக்கு நேர்ந்த கொடூரம்!

0
189

அநுராதபுரத்தில் 19 வயதான யுவதி ஒருவர் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளார்.

இந்த பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் நகர எல்லையில் வசிக்கும் 22 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் சென்ற 19 வயது யுவதிக்கு நேர்ந்த கொடூரம்! | The Brutality Of The 19 Year Old Girl Who Went

இந்நிலையில் பதுளை பிரதேசத்திலிருந்து அநுராதபுரத்துக்கு வந்த குறித்த யுவதி, வாடகை வீட்டில் தங்கியிருந்து உணவகம் ஒன்றில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், மோட்டார் சைக்கிளில் அவரை ஏற்றிச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.