பூனையால் பரிபோன தாயின் உயிர்!

0
250

பூனை கடித்ததன் காரணமாக இடது காலில் ஏற்பட்ட காயத்தினால் கிருமி தொற்றுக்கு உள்ளான மூன்று பிள்ளைகளின் தாயொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இது காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற பிரேத பரிசோதனையின் போதே தெரிய வந்துள்ளது.

உயிரிழந்தவர் தல்பே கிழக்கில் வசிக்கும் எழுபத்தைந்து வயதுடையவராவார்.

பிரேத பரிசோதனையில் தெரிய வந்தது

உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை நேற்று முன்தினம் (13ம் திகதி) காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி மகேஷ் தர்மரத்னவினால் நடைபெற்றது.

உயிரிழந்த பெண் வீட்டின் மாடியிலிருந்து கீழே இறங்கியபோது வீட்டுப் பூனை இடது காலில் கடித்துள்ளது. அவர் இதை அதிகம் கவனிக்காத நிலையில் இவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.

ஹபராது களுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 28-02 கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 13 ஆம் திகதி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.