யாழ்ப்பாண மாநகர முன்னாள் முதல்வர் வி. மணிவண்ணனின் (V.Manivanannan) தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட பண்ணை சுற்று வட்டத்தின் நிர்மாணப் பணிகள் தனியார் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் வேகமாக நடைபெற்று வருகின்றது.

இந்த சுற்று வட்டத்தின் நடுப்பகுதியில் வைப்பதற்கான திருவள்ளுவர் சிலை தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்தில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த பணிகள் விரைவில் பூர்த்தியடைந்து குறித்த சுற்றுவட்டம் மாநகரத்தை அழகுபடுத்தும் செயற்றிட்டத்தினை யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் வி.மணிவண்ணன், அதனை சார்ந்த உறுப்பினர்கள் நேரடியாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
