டிக்டொக் லைவ்வில் மனைவியை அறைந்த கணவன்!

0
361

ஸ்பெயின் சொரியா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் சமூக வலைதளமான டிக்டொக்கில் தனது 4 நண்பர்களுடன் லைவ் ஸ்டிரீமீங்கில் போட்டி ஒன்றில் பங்கேற்று டிக்டொக் லைவ்வில் பேசிக் கொண்டிருந்த போது பெண்ணை திடீரென அவரது கணவர் கன்னத்தல் அறைந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கண்ணீர் விட்டு அழுதார். கடந்த மாதம் 28 ஆம் திகதி இந்த நிகழ்வு நடைபெற்றது. அதில் அதிக பார்வையாளர்களை பெறுபவரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்.

டிக்டொக் லைவ்வில் மனைவியை அறைந்த கணவனுக்கு நேர்ந்த நிலை! | Husband Slaps Wife On Live Court Put Him Jail

இந்நிலையில் இந்த நிகழ்வு அனைத்தும் டிக்டொக் லைவ்-வில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் ஸ்பெயின் முழுவதும் பேசுபொருளானது.

பாலினம் சார்ந்த வன்முறைகளுக்கு எதிராக ஸ்பெயினில் சட்டங்கள் உள்ளன. இதனிடையே, மனைவி கன்னத்தில் கணவன் அறைந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தன் கணவன் மீது பொலிஸில் எந்த முறைப்படும் அளிக்கவில்லை.

ஆனால், மனைவியை கணவன் அறைந்த சம்பவத்தை பாலின ரீதியிலான வன்முறையின் கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து அந்த கணவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கணவர் சொரியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டதற்காக மனைவியை தாக்கிய கணவனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

மேலும், மனைவிக்கு அருகே 300 மீற்றர் (1000 அடி) தொலைக்குள் வரவும் தடை வித்தித்துள்ளது (அல்லது) மனைவியுடன் 3 ஆண்டுகள் பேச தடை விதித்துள்ளது.

அதுமட்டுமல்லாது இந்த காலகட்டத்தில் அந்த நபர் எந்த ஆயுதங்களையும் வாங்க தடை விதித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.