இராணுவத்தினரின் கனவில் புத்தர் தோன்றிய புத்தர்: யாழில் ஒரே இரவில் வைக்கப்பட்ட சிலை!

0
212

இராணுவத்தினர் ஒருவரின் கனவில் புத்தர் தோன்றி சிலை வைத்து வணங்குமாறு கூறிதாகவும் அதனால் தான் சிலையை வைத்தோம் என நிலாவரை கிணற்றுக்கு அருகில் கடமையில் ஈடுபட்டு வரும் குறித்த இராணுவத்தினர் அச்சுவேலி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

யாழில் திடீரென இரவோடு இரவாக நிலாவரை கிணற்றுக்கு அருகிலுள்ள அரசமரத்துக்கு கீழே புத்தர் சிலை அமைக்கப்பட்டமையால் நேற்று (25-02-2023) பதற்ற நிலை நிலவியது.

இது தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. அவர்கள் அங்கு விசாரணைகளை முன்னெடுத்த போதே மேற்கண்டவாறு இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

மக்களின் பாரிய எதிர்ப்பு காரணமாகவும் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தலையீட்டையும் அடுத்து சிலை இராணுவத்தினரால் எடுத்துச் செல்லப்பட்டது.

நிலாவரை பகுதியை தொல்லியல் திணைக்களத்தினர் உரிமை கொண்டாடும் நிலையில், நிலாவரை பகுதியை சுற்றி இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டு வருவதால் குறித்த சிலை வைத்திருந்தமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.