ஜனாதிபதி ரணில் கருத்துக்கு மஹிந்த போர்க்கொடி!

0
272

தேர்தலை நடத்தாமல் இருக்ககூடாது என்றும் நிச்சயம் அது நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் விடுத்த அறிவிப்பு தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே மஹிந்த ராஜபக்ச இதனை கூறினார்.

ஜனாதிபதி ரணில் கருத்துக்கு மஹிந்த போர்க்கொடி! | Elections Should Not Be Held Mahinda

நிதி இல்லை எனக் கூறி தேர்தலை நடத்தாமல் இருக்க முடியாது என தெரிவித்த மஹிந்த ஜனாதிபதியின் கருத்து தவறு என்றும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையிலேயே இருப்பதாகவும் இதன்போது மேலும் தெரிவித்தார்.